Monday, August 13, 2012

ரமளான் நாள் 11 - வாசிக்கிறவனும், கேட்கிறவனும், கைக்கொள்கிறவனும் பாக்கியவான்?


அன்புள்ள தம்பி,

உனக்கு சமாதானம் உண்டாவதாக.

உன் கடிதம் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்நீ திறந்த மனதுடன் என்கடிதங்களை படித்துதிறந்த மனதுடன் பதில் எழுதுகிறபடியால் நான் மிகவும்மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

உன் கடிதத்தில் சில முக்கியமான கீழ்கண்ட கேள்விகளை கேட்டுஇருந்தாய்:
1)       தேவன் தம் வார்த்தையை தீர்க்கதரிசிகள் மூலம் இறக்கினார்பைபிளில்தேவனுடைய‌ வார்த்தை எபிரேயம்கிரேக்கம் ற்றும் சிறிது அராமிக்மொழியிலும் உள்ளது. தேவன் இறக்கிய வார்த்தைகளில் உள்ள உண்மைஅர்தத்தை அறிந்துக்கொள்ள வேண்டுமானால்அம்மொழியில் (எபிரேய,கிரேக்கபடித்தால் தானே புரியும்தமிழில் படித்தால் எப்படி புரியும்?
2)       மேலும் வெளிப்படுத்தின விசேஷம் 1:3ம் வசனத்தில், " இந்தத்தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும்கேட்கிறவர்களும்இதில்எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள் "என்று உள்ளதுஅதாவது வாசிப்பவனும்கேட்பவனும்கீழ்படிகிறவனும்பாக்கியவான்இறைவன் எந்த மொழியில் இறக்கினானோ அதே மொழியில்வாசிப்பதும்,கேட்பதும் பாக்கியமாக பைபிள் கருதுகிறது அல்லவா?
3)       ஆகபைபிளே இப்படி சொல்லும்போதுகுர்ஆனை அரபியில் படித்தல்எப்படி செல்லாததாக ஆகும்ஏன் நீங்கள் இஸ்லாமைகுற்றப்படுத்துகிறீர்கள்?

உன் கேள்விகளை மேலோட்டமாக படித்தால்நீ சொன்ன விவரங்களில் நியாயம்இருக்கிறது என்று சொல்லத்தோன்றும்ஆனால்அவைகளை சிறிது ஆராய்ந்துபார்த்தால்உன் கேள்விகளில் உள்ள அறியாமை வெளிப்படும்இப்போதுஅவைகளை சுருக்கமாக விளக்குகிறேன்.

பைபிளின் தேவன் தன் தீர்க்கதரிசிகள் மூலமாக பேசும் போதுஅவர்கள் பேசியமொழியிலேயே பேசினார்அந்த தீர்க்கதரிசிகளுக்கு விவரம் புரிந்தால் தான்அவர்கள் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்அவர்கள் எபிரேய,கிரேக்க மற்றும் அராமிக் மொழியில் அதனை மக்களிடம் கொண்டு வந்துசேர்த்தார்கள்.

மூலமொழியில் படித்தால் தான்  உண்மை அர்த்தம் விளங்கும்,மொழியாக்கங்களில் படித்தல் அதன் அர்த்தம் பாதிக்கப்படும் என்பது உன் கேள்வி.உன்னுடைய கேள்வி சரியான கேள்வி தான்மேலும் நாம் ஆய்வு செய்வதற்குமுன்பாக,  ஒரு சில உதாரணங்களை உனக்கு நான் காட்ட விரும்புகிறேன்.

கீழ்கண்ட இரண்டு வசனங்களை நான் மூலத்தில் கொடுத்துள்ளேன்அவைகளைபடித்துப் பார்த்துஉனக்கு முழுவதுமாக புரிகின்றதா என்று பார்.
ஆங்கிலத்தில் உள்ள Transliteration நீ படிக்கலாம்.

Transliteration:  Houtōs gar ēgapēsen ho Theos ton kosmon, hōste ton Huion ton monogenē edōken, hina pas ho pisteuōn eis Auton mē apolētai all᾽ echē zōēn aiōnion.
Transliteration: Qāla 'Innamā 'Anā Rasūlu Rabbiki Li'haba Laki Ghulāmāan Zakīyāan

உனக்கு இவ்விரு வசனங்களின் பொருள் மிகவும் ஆழமாக புரிந்ததாஏனென்றால்,இவைகள் மூல மொழிகளில் உள்ளனஉனக்கு தேவையானால்மூல  மொழிஎழுத்துக்களிலேயே தருகிறேன்கீழே உள்ளவற்றை படித்துப்பார்.

Greek:  Οὕτως γὰρ ἠγάπησεν ὁ Θεὸς τὸν κόσμον, ὥστε τὸν Υἱὸν τὸν μονογενῆ ἔδωκεν, ἵνα πᾶς ὁ πιστεύων εἰς Αὐτὸν μὴ ἀπόληται ἀλλ᾽ ἔχῃ ζωὴν αἰώνιον.
قَالَ إِنَّمَا أَنَا رَسُولُ رَبِّكِ لِأَهَبَ لَكِ غُلَامًا زَكِيًّاِ :Arabic

நீ மூலமொழியில் படித்தாலும் உனக்கு புரியாதுஅதனுடையடிரான்ஸ்லிடெரேஷனில் படித்தாலும் புரியாது.

ஆனால்உன்னுடைய முதல் கேள்வி என்னவாக இருந்தது?  இறைவன் இறக்கியமூல மொழியில் படித்தால் தானே பொருள் சரியாக புரியும்என்பதாகும்.ஆனால்மேலேயுள்ள இரண்டு வசனங்களை நீ மூல மொழியில்படித்தாய் ஆனால்உனக்கு 1% சதவிகிதமும் புரியவில்லை.

மூல மொழியில் படித்தால் உண்மை பொருள் புரியும் என்பது ஒரு புறமிருக்க,முதலாவது நமக்கு அந்த மொழி தெரிந்து இருக்கவேண்டும் என்பது அடிப்படைதேவையாகும்எனக்கு எபிரேய மொழி தெரியாதுகிரேக்க மொழியும் தெரியாது.நான் சங்கீதம் 1 () 23 மற்றும் இயேசுவின் மலைப்பிரசங்கத்தை எபிரேயமற்றும் கிரேக்க மொழியின் டிரான்ஸ்லிடெரஷனில் படித்தல் அதனால் என்னபயன் கிடைக்கும்?

எனக்குகர்த்தர் சொன்ன வசனத்தின் பொருள் 100% புரியவேண்டும் என்பதற்காகநான் இப்போது உட்கார்ந்துக்கொண்டுஎபிரேயம் மற்றும் கிரேக்க மொழியைகற்கமுடியாதுஒருவேளை எனக்கு நேரமும்திறமை இருந்துகற்றுக்கொண்டாலும்உலகத்தின் எல்லா மக்களும் மூல மொழிகளைகற்றுக்கொண்டு வேதங்களை படித்தால் தான் அந்த வேதங்களை கொடுத்தஇறைவன் அங்கீகரிப்பான் என்பது தவறான கோட்பாடாகும்.

சங்கீதம் 1:1,2 வசனங்கள் எனக்கு தமிழ் மொழியிலேயே 100% புரிந்துவிட்டது,இதை புரிந்துக்கொள்ள நான் ஏன் மூல மொழிக்குபோகவேண்டும்அது வீணானகாரியமாகும்:

சங்கீதம் 1:1,2 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

மேலும் இயேசுவின் மலைப்பிரசங்கத்தில் உள்ள சாராம்சம் எனக்கு தமிழிலேயேநன்றாக புரிந்துவிடுகிறதுநான் ஏன் கிரேக்க மொழியில் அவைகளை படிக்கமுயற்சி எடுக்கவேண்டும்?

மத்தேயு 5:7,8 இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.

வேதபண்டிதர்கள் அல்லது பைபிள் ஆய்வு செய்பவர்கள் தங்களின் ஆய்விற்குஉபயோகமாக இருக்கும் என்பதற்காக மூல மொழியை கற்று அவர்கள் அதன் அடிப்படையில் தங்கள் ஆய்வை செய்யலாம்இப்படிப்பட்டவர்களுக்கு  மூலமொழியை கற்பது உபயோகமாக இருக்குமே ஒழியசாதாரண மக்களுக்கு மூலமொழியில் படிப்பது அவசியமற்றவதுஇது சாத்தியமும் இல்லாததுஇறைவன்மூல மொழியில் படித்தால் தான் அங்கீகரிப்பேன் என்றுச் சொன்னால்அவன்உண்மையான இறைவனே இல்லை.

இரண்டாவதாகநீ வெளி 1:3ம் வசனத்தை குறிப்பிட்டுஅதில் இருக்கும்வாசிக்கிறவனும்கேட்கிறவனும் பாக்கியான் என்ற சொற்றொடரை குறிப்பிட்டுஉன் புரிந்துக்கொள்ளுதலை வெளிப்படுத்தியிருந்தாய்.

நீ புரிந்துக்கொண்டது போலகிரேக்க அல்லது எபிரேய மொழியில் படித்தால்தான்கேட்டால் தான் பாக்கியவான் என்று தேவன் கூறவில்லைஏனென்றால்,அப்படி செய்வது உண்மையாக இருந்திருந்தால்கடந்த 2000 ஆண்டுகளாககிறிஸ்தவர்கள் பின்பற்றி இருந்திருப்பார்கள்ஆனால்அப்படி யாரும்செய்யவில்லை, அதாவது எல்லாரும் கிரேக்க மற்றும் எபிரேய மொழியை கற்றுக்கொண்டு வந்திருப்பார்கள், வேதபண்டிதர்கள் தவிர மற்ற யாரும் இபப்டி செய்யவில்லைமேலும்அதே வசனத்தில் "கைக்கொள்கிறவனும்என்றசொற்றொடர் இருப்பதையும் காணவும்ஒருவருக்கு புரியவில்லையானால் எப்படிஅவன் அவைகளை கைக்கொள்ளமுடியும்ஒருவன் கீழ்படியவேண்டும் என்றுச்சொன்னால்அவனுக்கு முதலாவது புரியவேண்டும்ஒருவனுக்குபுரியவேண்டுமென்றால்அவனுக்கு புரியும் மொழியில் அவனுக்குசொல்லவேண்டும்.

ஆக,  வெளி 1:3ல் சொல்லப்பட்ட விவரத்தின் படிகிறிஸ்தவர்கள் எபிரேயமற்றும் கிரேக்க மொழியில் இயந்திரங்களைப் போலபடிக்கவேண்டும்,கேட்கவேண்டும் என்று சொல்லப்பட்ட கட்டளையில்லைகேட்பது நமக்கு புரியும்மொழியில் இருக்கவேண்டும்படிப்பது நமக்கு புரியும் மொழியில்இருக்கவேண்டும்அப்போது தான் படித்தவைகளுக்கு கீழ்படியமுடியும்ஆகஉன்புரிதல் தவறாக உள்ளது தம்பி.

நான் அடிக்கடி கேள்விபடுகின்ற விவரம் என்னவென்றால்குர்ஆனைஅரபியில் படிக்கும் ஒவ்வொரு எழுத்துக்கும் அல்லாஹ் நன்மைகளைதருவார் என்பதாகும்.  இது மிகவும் தவறான ஒன்றாகும்ஒருமனிதனுக்கு தான் படிப்பதே தனக்கு புரியாது என்று இருக்கும் போதுஇறைவன் எப்படி நன்மைகளை தருவான்இது அறிவுடையோருக்கு ஏற்றதுஅல்லஒருவேளை அரபி தெரிந்தவர்கள் குர்ஆனை அரபியில் படிக்கும்போது ஒவ்வொரு எழுத்துக்கும் அல்லாஹ் நன்மைகளை தருவான் என்றுசொன்னால்ஒரு பேச்சுக்காகவாவது ஏற்றுக் கொள்ளலாம்ஆனால்,அரபியே தெரியாமல் ஒரு இயந்திரம் போல படித்துக்கொண்டே போனால்,அல்லாஹ் நன்மைகளை தருவான் என்பது ஏமாற்றுவேலையாகும்.
  
மேலும்அரபியில் குர்ஆனை புரியாமல் படிப்பதற்கும்அதே குர்ஆனை நமக்குபுரியும் மொழியில் படிப்பதற்கும் அல்லாஹ் எப்படி நன்மைகளை தருவான் என்றுகேள்வி கேட்டால்இரண்டிற்கும் நன்மைகள் உண்டுஆனால்அரபியில்படிப்பதற்கு (புரியாமல் படித்தாலும்அதிக நன்மையை அல்லாஹ் கொடுப்பான்என்றுச் சொல்வார்கள்தமிழாக்கத்தில் குர்ஆனை படித்துபுரிந்துக்கொள்ளவேண்டும் என்று ஆர்வம் இருப்பவர்களுக்கு இப்படிப்பட்டவிளக்கங்கள் தடைக்கற்களாக மாறிவிடுகின்றன.

தம்பி அதிகமாக எழுதிவிட்டேன்உன்னுடைய அடுத்த கடிதத்திற்காககாத்துக்கொண்டு இருக்கிறேன்.

இப்படிக்கு, உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.

No comments:

Post a Comment